முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எமராஜன் தலைமை வகித்தார். 

விருதுநகர் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ச.கண்ணன், மாவட்ட தலைவர் முத்துராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

பொதுச்செயலாளர் க.லட்சுமணன், எதிர்கால நடவடிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 17 மாவட்டங்களில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர்களை கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநில பொருளாளர் லோகராஜன் நன்றி கூறினார். 

இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தினர் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக