முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

"அக்.8 வேலைநிறுத்தத்தில் "ஜாக்டா" பங்கேற்காது - அமைச்சரை சந்தித்தப்பின் கூட்டுக்குழு தலைவர் திரு.இளமாறன் அறிவிப்பு

"ஜாக்டோ" அமைப்பு பள்ளிக்கல்வி "அக்.8 அன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்நிலையில் "ஜாக்டா" கூட்டுக்குழு தலைவர் திரு.இளமாறன் அவர்கள் இன்று (06/10/2015)காலை பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களை கோட்டையில் நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது அரசுக்கு "ஜாக்டா" அமைப்பின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அக்.8 அன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தங்கள் அமைப்பை சார்ந்த எந்த ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

ஏற்கனவே அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரசுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து போராட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ள நிலையில் "ஜாக்டா" அமைப்பும் பங்கேற்காது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக