பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு வங்கி கணக்குகள் மூலம் மாத ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க, சிவகங்கை மாவட்ட கிளைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஹெச்.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எம்.மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.துளசிதாஸ், துணைச் செயலர் தேவிகா, மாவட்டப் பொருளாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.பாபுஜி நன்றி கூறினார்.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் மாத ஊதியம் வழங்க அரசு ஆணை பிறப்பித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி - தினமணி
உழைப்பின் பலன் கிடைத்த ஆனந்தம் . . . . நன்றி
பதிலளிநீக்குபகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஈரோடு தினமணி நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி..........
பதிலளிநீக்குபகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஈரோடு தினமணி நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்கு