முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை.

மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில், அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் படி குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 1.50 லட்சம் அஞ்சல் துறை அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுன்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் நிலையங்களே பெற்று சம்பந்தப்பட்ட துறைகளு க்கு விரைவாக அனுப்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவி த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக