திருப்பூர்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், போராட்ட
ஆயத்த விளக்க கூட்டம், திருப்பூர் சி.எஸ்.ஐ., மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் துரை தில்லியப்பன் தலைமை வகித்தார். ஓய்வு பிரிவு மாவட்ட தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோசப் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார்.
"ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006ம் ஆண்டு ஜன., 1 முதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனத்தை அமல்படுத்த வேண்டும்.
"அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமி ழாசிரியர், வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் மறியல் மற்றும் போராட்டம் நடத்துவது குறித்து, கூட்டத்தில் விளக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் துரை தில்லியப்பன் தலைமை வகித்தார். ஓய்வு பிரிவு மாவட்ட தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோசப் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார்.
"ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊதியத்தை, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006ம் ஆண்டு ஜன., 1 முதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனத்தை அமல்படுத்த வேண்டும்.
"அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமி ழாசிரியர், வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் மறியல் மற்றும் போராட்டம் நடத்துவது குறித்து, கூட்டத்தில் விளக்கப்பட்டது.
Thanks - Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக