முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்துக்கள்

சிவனும் சக்தியும் சேர்ந்து
அர்த்தநாரீஸ்வரான நன்னாள் இன்னாள்
என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது.
இராவணை அழித்த இராமன்
பதினான்கு ஆண்டுகால வனவாசம் முடித்து
அயோத்தி திருப்பிய நன்னாளைக் கொண்டாட
அந்நாட்டு மக்கள் தீபங்களை ஏற்றி
இத் திருநாளை கொண்டாடியதாக
இராமாயணம் கூறுகிறது.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்தபின்
அவ்வசுரனின் வேண்டுகோளுக்கு இணங்க
தீபாவளி கொண்டாடப் படுவதாகவும்
அவனது அன்னை பூமாதேவியின்
அவதாரமான சத்யபாமா
கிருஷ்ண பகவானிடம் வேண்டியதற்கிணங்க
நாம் ஸ்நானம் செய்யும்
எண்ணெயில் மாகாலெட்சுமியும்
நாம் ஸ்நானம் செய்யும்
ஜலத்தில் கங்காதேவியும்
எழுந்தருளி அருள்வதாக ஐதீகம்.
இத்தகு சிறப்பு மிக்க இந்நன்னாளில்
நம் வாழ்வை இருளச் செய்யும்
அகங்காரம், பொறாமை, கோபம்
ஆகியனவற்றை நீங்கி
நாம் ஒளிர தீபங்கள் ஏற்றி
இருள் நீங்கி ஒளி பெற வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக