தலைமை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் அக்டோபர் மாத ஊதியத்தை முன்னதாகவே வழங்கி, தீபாவளி பண்டிக்கைக்கான செலவுகளுக்கு உதவ வேண்டி மனு கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியம் அக்டோபர் 25 ஆம் தேதியே கிடைக்க ஆவன செய்யும் பட்சத்தில், கிடைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது. போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இரண்டாண்டுகளாக ஊதிய உயர்வும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேற்படிப்பிற்கான ஊக்க ஊதியமும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவைகள் அனைத்தும் விரைவில் கிடைக்குமா? என்ற கேள்வி அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக