சட்டப்பேரவை விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்டு, அரசாணை எண் 11.11.11 ன் படி பணியமர்த்தப்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் சார்பாக, ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி, மக்களின் தேவைகளை அறிந்து, உணர்ந்து அவ்வப்போது நல்ல பல அரசாணைகளை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில், பகுதிநேர சிறப்பாசிரியர்களை தொகுப்பு ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றி விரைவில் அரசாணை வெளியிட்டு எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அம்மா அவர்களை பணிவுடன் வேண்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக