முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

ஊட்டியில் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது

ஊட்டி: ஊட்டியில் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடந்த போராட்டத்தில், 'தமிழகத்தில் உள்ள, 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

கூட்டமைப்பின் நீலகிரி மாவட்ட கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் பிரிசில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை, 10:00 மணிமுதல், மாலை, 5:00 மணிவரை நடந்த போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பகுதிநேர ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக