சேலம் (ஜுன் 26 2015): சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் பலனாக கீழ்கண்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன :
- பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பாக ஜூன் 26 2015 முதல் ஜூலை 7 2015 வரை WORKSHOP நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காலிபணியிடம் மற்றும் உபரி பணியிடங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு அனவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவருக்கு அனுப்பப்படும்.
- அதன் பிறகு SSA திட்ட அலுவலரிடமிருந்து பணிநிரவல் மற்றும் கலந்தாய்விற்கான திட்டம் வகுக்கப்பட்டு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- இச்சந்திப்பில் சேலம் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக