முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 23 மார்ச், 2015

நெல்லையில் நேற்று 22.03.2015 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்


நெல்லை ஜங்சன் அரவிந்த் மருத்துவமனை எதிரில் உள்ள என்.ஜி.ஓ சங்க கட்டிடத்தில் நேற்று 22.03.2015 காலை 10 மணிக்கு தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.




நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் என். முப்பிடாதி தலைமை தாங்கினார்.



கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களான எங்களுக்கு தகுதித் தேர்வில் விலக்களித்து, எங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டி தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக