தமிழகத்தில் அரசாணை எண் 177. நாள் 11.11.2011 ன் படி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட, பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ. 5000 த்திலிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணைஎண் 186. நாள் 18.11.2014 முதன்மைச் செயலர் அவர்களால் வெளியிடப்பட்டது.
இவ்வாணையில் ஒரு பகுதிநேர பயிற்றுநர், காலிப்பணியிடம் ஏற்படுமாயின் இரு பள்ளிகளில் பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில் 1300 பகுதிநேர பயிற்றுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிற்க !
தற்பொழுது சுமார் 2000 பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்கள், குறைந்த ஊதியம் மற்றும் பணிவரன்முறை செய்யாமை போன்ற காரணங்களால் காலியானதாக பத்திரிக்கைச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
ஆகையால் பணியாற்றிவரும் பகுதிநேர பயிற்றுநர்களில் சுமார் 2000 பேருக்கு இரு பள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அரசாணைகளை நமது அரசாணைப்பகுதியில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக