முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 12 செப்டம்பர், 2013

பகுதி நேர ஆசி­ரி­யர்­க­ளுக்கு வங்கி கணக்கில் சம்­பளம்

பகுதிநேர ஆசிரியர்கள் ECS முறையில் சம்பளம் பெற தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டிய கடிதம் இந்த இடுகையின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.பேட்டை:பகுதி நேர ஆசி­ரி­யர்­க­ளுக்கு, இனி வங்­கிக்­கணக்கில் சம்­பளம் செலுத்­தப்­படும். பாட குறிப்­பு­களை பரா­ம­ரிக்­கவும், உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளிப்­பட்டு வட்­டார அனை­வ­ருக்கும் கல்வி இயக்­க­கத்தின் சார்பில், நேற்று முன்­தினம் பகுதி நேர ஆசி­ரி­யர்­க­ளுக்­கான, முதல் கூட்டம் நடந்­தது. இதில், பகுதி நேர ஆசி­ரி­யர்கள் பின்­பற்ற வேண்­டிய நடை­முறைகள் குறித்து விளக்­கப்­பட்­டன.

கடந்த ஆண்டு, மார்ச் 6ம் தேதி, தையல், ஓவியம், விளை­யாட்டு, கணினி, இசை உள்­ளிட்ட பகுதி நேர ஆசி­ரி­யர்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டனர். இவர்­களுக்கு, மாதம் 5,000 ரூபாய், தலை­மை­யா­சி­ரியர் மற்றும் கிராம கல்விக் குழு தலைவர் மூல­மாக, சம்பளம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

கூட்­டத்தில், வாரத்தில் மூன்று நாட்கள், மூன்று மணி நேரம் மட்டும் தங்­க­ளுக்கு, ஒதுக்­கப்­பட்ட பாடத்தை நடத்த வேண்டும். அது­கு­றித்த, பாட குறிப்பு பதி­வேடு, பரா­ம­ரிக்க வேண்டும் என, தெரி­விக்­கப்­பட்­டது. இனி, மாத சம்­பளம், ஆசி­ரி­யர்­களின் வங்­கிக்­கணக்கில் செலுத்­தப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்டது. ஆனால், சம்­பள உயர்வு மற்றும் பணி­யிட மாற்றம் குறித்து, எந்த அறி­விப்பும் இல்­லா­தது ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஏமாற்­றத்தை அளித்­தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக