முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ஆகஸ்டு 10 ஆம் தேதி நாமக்கல்லில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்களின் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் பள்ளிகளுக்கு தூணாக விளங்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு முழுநேரப் பணி வழங்கி, காலமுறை ஊதியத்துடன் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது.

மேலும் E.C.S முறையில் ஊதியம் வழங்க வேண்டும். கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி - கடலூர் திரு. செந்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக