முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

விருதுநகரில் மறியல் போராட்டம் : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் 268 பேர் கைது - தினமணி


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் 268 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கணேசன் தலைமையில் நடந்தது. இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 95 பெண்கள் உள்பட 268 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக