முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 ஜூலை, 2013

பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை

திண்டுக்கல்:தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பேரையும் முழுநேர பணியாளராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் பகுதி நேர ஆசிரியர்கள் மாநில கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் 16 ஆயிரம் பேருக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கியுள்ளார். இவர்கள் ஐந்தாயிரம்ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்தி, வீட்டு வாடகை, குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மே மாதத்திலும், தேர்வு நாட்களிலும் சம்பளம் இல்லாமல் உள்ளது. 12 நாட்களுக்கு குறைவாக பணியாற்றினால் முழு சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஊழியர்களாக்க வேண்டும். இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக