காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை 10 ரூபாய் நாணயத்தில் வரைந்து அசத்தியுள்ளார், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்த செல்வம்.
ஓவியரான இவர் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர கலை ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த 8 ஆண்டுகளாக, தேசத் தலைவர்கள் மற்றும் தெய்வத்தின் படங்களை வித்தியாசமான முயற்சியில் வரைந்து அசத்தி வருகிறார். நாக்கு, மூக்கு, தாடி, தலைமுடி, கண் இமை, பல் ஆகியவற்றை தூரிகையாகக் கொண்டு பல ஓவியங்கள் வரைந்துள்ளார்.
தாய்ப்பாலின் அவசியம் குறித்த மணல் சிற்பம், சாக்பீஸில் தேசத் தலைவர்கள் படம், சோப்பில் தெய்வப் படங்கள் ஆகியவற்றை வரைந்துள்ளார். இதையடுத்து ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்தை 10 ரூபாய் நாணயத்தில் வரைந்துள்ளார். மேலும், நாணயங்களில் பல்வேறு தலைவர்களின் படத்தையும் வரைந்துள்ளார்.
இதுகுறித்து செல்வம் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல ஓவியங்களை வரைந்துள்ளேன். உலக சாதனை படைப்பதே லட்சியம் என்றார்.
நன்றி - தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக