By காஞ்சிபுரம்,
First Published : 03 March 2014 12:26 AM IST
பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். தமிழகத்தில் பணியாற்றும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் வறுமை பிடியில் சிக்கியுள்ளனர்.
எனவே அவர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்ச் 22-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில கோரிக்கை விளக்க மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்டச் செயலர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Thanks Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக