தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஈ.கே.தினகரன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ப.முருகதாஸ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சுந்தர் கணேஷ் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஈ.சி.எஸ் மூலம் நேரடியாக வங்கியின் மூலம் மாத சம்பளம் வழங்க உத்தரவிட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்தல், வருகிற மார்ச் 16ல் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் முதல் மாநில மாநாடு மற்றும் கோரிக்கை விளக்க மாநாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொள்ளவேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் மாநில் மகளீரணி இணை செயலாளர் இளமதி நன்றி கூறினார்.
நன்றி - தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக