முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைக்கு ஆதரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கக் கோரிக்கை


பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் எனப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.

தீர்மானங்கள்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களின் ஓய்வூதிய உரிமையை பறிக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க முயற்சிப்பதை திரும்பப் பெற வேண்டும்.

மாவட்டச் செயலர் தெரேசா கேத்தரீன், துணைத்தலைவர் செல்வம், இணைச் செயலர் ராமமூர்த்தி, மகளிர் அணி கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By கடலூர் First Published : 24 February 2013 12:48 AM IST
நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக