திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. தா.பாண்டியன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அம்மனுவில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் :
- கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிடுமுறைக் காலத்தில் ஊதியம் வழங்கப்பட வில்லை.
- மற்ற ஆசிரியர்களைப் போல் கலந்தாய்வு மற்றும் பணியிடமாற்றம் இல்லை.
- பணிப்பதிவேடு பராமரிக்கப்பட வில்லை.
- குடும்ப நல நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சலுகைகள் இல்லை.
- ஊதியத்தை அவரவர் வங்கிக்கணக்கில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் அதே நாளில் செலுத்தப்படுவதில்லை.
- பொங்கல் கருணைத் தொகை வழங்கப்படுவதில்லை.
- பெண்களுக்கு பேறுகால விடுப்பு இல்லை. தற்செயல் விடுப்பு கூட அனுமதிக்கப்படுவதில்லை.
இக்குறைகள் களையப்பட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்று அக்கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக