முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 18 ஜனவரி, 2014

திண்டுக்கல் மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முதல்வரின் கவனத்தை பெற நன்றியறிவித்து பேரணி நடத்தினர்

திண்டுக்கல் :  சனிக்கிழமை ஜனவரி 18, 2014

திண்டுக்கல் மாவட்டத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றியறிவித்து பேரணியாக திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் தொடங்கி தலைமைதபால் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

பின்னர் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மனு அனுப்பினர். அம்மனுவில் குடும்பச் சூழல், பணிச் சூழல் ஆகிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ள நிலையையும், முழுநேர ஆசிரியர்களாக்கி முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்துள்ளனர்.


  

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக