சாக்பீசை கொண்டு ஓவியம் வரையலாம் இது நாம் அறிந்த விஷயம் தான். ஆனால் சாக்பீசில் ஓவியம் வரையலாம் என்று அதனை செய்து காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் வேடச்சந்தூரைச் சேர்ந்த ஆசிரியர் சபரிநாதன்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே குஜிலியம்பாறையில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் சபரிநாதன் என்பவர் வித்தியாசமாக கரும்பலகையில் எழுத பயன்படும் சாக்பீசை கொண்டு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்து வருகிறார். இயற்கை காட்சிகள் முதல் தேச தலைவர்கள் வரை அனைத்தையும் அவர் சாக்பீசைக் கொண்டு வரைவதை பார்த்த மாணவர்களே அவரிடம் ஆர்வத்துடன் ஓவியம் பயின்று வருகின்றனர்.
கணினியின் வரவால் கடந்த பல ஆண்டுகளாக ஓவியக்கலை அழிந்து வருவதாகவும் அதனை சீர்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவருடைய சாக்பீஸ் ஓவிய சாதனை மாவட்ட அளவில் மட்டுமே உள்ள நிலையில், உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க நோக்கில் ஒரு சாக்பீசில் ஆயிரம் அப்துல்கலாமின் உருவத்தை வரையும் பணியில் சபரிநாதன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்
தற்போது பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் தனக்கு போதிய வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் கேள்வி குறியாக வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்தும் விதமாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணியை வழங்க வேண்டும் என்றும் சபரிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக