முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

வேதாரண்யத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்



 

  நாகப்பட்டினம் , வேதாரண்டயத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்ற சனிக்கிழமையன்று ( 27.2.16 ) வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர். நாகை தெற்கு மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கைகளான மே மாத ஊதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, பணி நிரவல் சிக்கலுற்றதால் மீண்டும் ஒரு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வினை நடத்தி, பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிகைக்களை வலியுறுத்தி பேசினர். 

பிறகு கோரிக்கைகளை கோஷமிட்டனர். மாநில அளவில் சென்னையில் மார்ச் 2 ஆம் தேதி நடைப்பெறும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள தீர்மானித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக