- அனைவருக்காகவும் கடலூர் செந்தில் (எ) சி.செந்தில்குமார் (9487257203)
- G.O.177 ஆணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணிபுரிய இதுவரை வாய்ப்பளிக்கப்படவில்லை.
- இரண்டாவதாக வெளியிடப்பட்ட G.O.186 ஆணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர்அதிகபட்சமாக இரண்டு பள்ளிகளில் பணிபுரிய வாய்ப்பளிக்கப்படவில்லை.
- G.O.186 ஆணைப்படி ECS முறையில் மாதத்தின் முதல் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
- G.O.186 ஆணைப்படி பணிநிரவல் RTE விதிமுறைகளின்படி நடைபெற்றாலும், பணிநிரவலால் தொலைதூரப் பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள் பள்ளிகளுக்கு சென்றுவர கூடுதல் நேர பயணத்தாலும்-பயணச்செலவாலும் 7000 தொகுப்பூதியத்தில் தவிப்பதை தடுத்திட மறுவாய்ப்புகள் இதுவரை ஆய்வுக்குக்கூட எடுத்துக்கொள்ளவில்லை.
- அரசாணையில் மே மாதம் வேலையும் இல்லை-ஊதியமும் இல்லை என்று ஆணையிடப்படாதபோது சூழ்ச்சியாக இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஊதியங்கள் வழங்கப்படவில்லை.
- காலஞ்சென்ற பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்கள் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை.
- தீபாவளி, பொங்கல் போனஸ் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
- பள்ளிப்பணியில் எல்லா வகையிலும் முழு அளவில் பயன்படுத்தும் பகுதிநேர ஆசிரியர்களை யாவரும் பரிந்துரைக்கவில்லை. ஜாக்டா அமைப்பின் 08.10.2015, 1.2.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
- முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்த்திட அனுப்பும் கோரிக்கை மனுக்களும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு வருவதால் ஆழ்ந்த கவலையில் செய்வதறியாமல் கடவுளை வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக