முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் – 2.3.2016 அழைப்பு - Thanks tn parttime teachers Facebook Group

23.2.2016 அன்று சென்னையில் மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. 

அப்போது காவல்துறை அதிகாரிகள் நம் கோரிக்கை சரியானது என்பதால் நம் மாநில நிர்வாகிகளை SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களை சந்திக்க வைத்தனர் அதில் இயக்குனர் அவர்கள் கூறியது :-

“ உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. உங்களை பணிநிரந்திரம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு. ஆகையால் இங்கு போரடுவதை விட்டுவிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க வைக்க வைய்யுங்கள். தமிழக அரசு நினைத்தால் உங்களை பணி நிரந்தரம் செய்யமுடியும். அப்படி நடக்கும்போது நான் முதல் ஆளாக உங்களுக்கு உறுதுனையாக இருப்பேன் “, என்று கூறினார். 

ஆகையால் நாம் தமிழக அரசை திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும். எனவே நமது ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து வருகிற 02.03.2016 புதன் கிழமை சென்னையில் நடைபெறுகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய மாபெரும் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டத்திற்கு காவல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 

பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் அணி திரளாக வருக! வருக!! வருக !!! என்று  அழைக்கிறோம்..

இவண்
மாநில நிர்வாகிகள்

1 கருத்து: