22.08.15 அன்று மதுரையில், நம் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், சேர்மன் திரு. சோலைராஜா அவர்களின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு திரு. சேசுராஜா, திரு.முருகதாஸ், கோவை ராஜா, திரு. ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
- பணிநிரவலில் உள்ள குறைகளை அமைச்சர்கள் மற்றும் இயக்குநரிடம் நாளை ( 24.8.15 ) முறையிடுவது.
- நம் கோரிக்களை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், கவன ஈர்ப்பு பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது.
- மேற்கண்ட பேரணியில் அனைத்து ஆசிரியர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, மாவட்ட நிர்வாகிள் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது.
- அப்படியும் கோரிக்கைள் நிறைவேறவில்லை எனில், செப்படம்பர் மாதம் 21 ம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
அனைவரும் பங்கேற்போம் !
நமக்காக நாமே பங்கேற்போம் !
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
வெற்றி பெறும் வரை போராடுவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக