முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 25 ஜூன், 2015

நூறு மாணவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவான பள்ளிகளின், பகுதிநேர பயிற்றுநர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்

அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களின் விவரங்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றது. 

அதன் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்கள் வேறு பள்ளிக்கு பணி நிரவல் முறையில் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளனர். 

இதற்கான கடிதம் மாநில திட்ட இயக்குநர் அவர்களிடமிருந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், அனைவருக்ககும் கல்வி திட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 


மேலும் விவரங்களுக்கான படிவங்களை அந்தந்தப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் கோரப்பட்டு வருகின்றது. 

இவ்விவரங்கள் 1.9.2014 ல் பெறப்பட்ட விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, பணிநிரவல் நடைப்பெற உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து பணிக்கு செல்லாத பகுதிநேர பயிற்றுநர்கள் பணியிலிருந்து விடுக்கப்படவுள்ளனர். 

எந்தெந்த மாவட்டங்களின் கண்காணிப்பாளர்கள் எந்த தேதியில் சென்னையில் விவரங்களை கொடுக்க வேண்டும் என்பதை கீழ்க்கண்ட அட்டவணை வாயிலாக அறியவும்.


1 கருத்து:

  1. இடைத்தேர்தலுக்கு முன், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் என்று சங்கத்தினர் சொல்லவில்லையே ! ?

    ஊதிய உயர்வாணை SSA budget ல வருமா ? வெறும் பணியிட மாறுதல் மட்டுந்தானா?

    பதிலளிநீக்கு