கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
2)சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
3) 14 மார்ச் 2015 அன்று செய்தித்தாள் ஒன்றில் பகுதிநேர ஆசிரிய சங்கத்தின் செயல்பாடுகளை தவறுதலாகவும், சங்கத்திற்கு அவதூறு பரப்பும் வகையில் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
4) பகுதிநேர ஆசிரிய சங்கத்தின் சார்பாக அமைச்சருக்கோ, நிர்வாகிகளுக்கோ பணம் தருவதற்காக வசூல் செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறான செய்தி.
5) இது போன்ற தவறான செய்தியை பரப்புவோர் மீது சங்கத்தின் சார்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
6) தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்கள் மீது மிகுந்த பரிவு வைத்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் முழுநேர ஆசிரியர்களாக பணி ஆணை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அரசுக்கும் பகுதிநேர ஆசிரியர் சங்கத்திற்கும் பிரிவு ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்புகிறார்கள். இதை வன்மையாக பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக கண்டிக்கிறோம்.
7) 2015 ஜூன் 14-ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.ஜெகதீசன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக