முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

புலம்பும் பகுதிநேர ஆசிரியர்கள் - புவி அரசு, சீர்காழி

பிச்சை எடுக்குதாம் பெருமாளு அதை புடுங்குதான் அனுமாரு..... 
– புவி அரசு

தமிழக அரசுப் பள்ளிகளில் 15169 பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஊதியம் மின்ணணு பட்டுவாடா முறையில், அனைவருக்கும் கல்வி இயக்க நிதியிலிருந்து தொகுப்பூதியமாக மாதா மாதம் தினக்கூலி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்ற அக்டோபர் 2014 மாதத்தில் தீபாவளி,கன மழை போன்ற காரணங்களால் பள்ளி வேலை நாட்கள் குறைத்த காரணத்தால் கொடுக்கும் 5000 ரூபாய் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளனர். 

அனைவருக்கும் கல்வி இயக்கம் மழை, அரசு விடுமுறை போன்ற காரணங்களால் வருகை நாட்கள் பத்து நாட்கள் இருந்தால் போதுமானது எனவும், மீதி உள்ள இரண்டு நாட்கள் வேலை நாட்களாக எடுத்துகொள்ளப்படும் என 5/11/2014 நடை பெற்ற சீர்காழி ப்ளாக் பகுதி நேர ஆசிரியர்களிடம் கூறிவிட்டு சீர்காழி ப்ளாக்கை சேர்ந்த நான்கு ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளனர். 

கொடுக்கும் 5000 ஊதியத்தில் பிடித்தம் செய்தால் நாங்கள் தற்போது உள்ள சுழலில் எவ்வாறு வாழ்கையே நடத்துவது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக