முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.

கோரிக்கைகள்

1.  பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் .

2. 01.06.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் .

3. தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து 50 சதவிகிதத்தை பதவி உயர்வு மூலம் வழங்கிட வேண்டும் .

4. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தினை வழங்க வேண்டும் .

5. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் .

6. ஆசிரியர் தகுதித்தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக