முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 14 டிசம்பர், 2013

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. 

ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது.

இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள். கடந்த 2000ல் துவங்கிய எஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையி 3ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை கலைத்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. 

ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள் முடிய வேண்டும். சில காரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம்.தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில்,இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர.

1 கருத்து: